WHO IS READING THIS BLOG JESUS BLESS YOU

சிம்சோன்

தாண் வம்சத்தானாகிய சோரா ஊரானான ஒரு மனுஷன் இருந்தான்அவன் பேர் மனோவாஅவன் மனைவி பிள்ளைபெறாத
மலடியாயிருந்தாள்
கர்த்தருடைய தூதனானவர் அந்த ஸ்திரீக்குத் தரிசனமாகிஅவளை நோக்கிஇதோபிள்ளைபெறாத மலடியான நீ கர்ப்பந்தரித்துஒரு குமாரனைப் பெறுவாய்.

ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாதபடிக்கும்தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.
நீ கர்ப்பந்தரித்துஒரு குமாரனைப் பெறுவாய்அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படலாகாதுஅந்தப் பிள்ளை பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கத் தொடங்குவான் என்றார்.

அப்பொழுது அந்த ஸ்திரீ தன் புருஷனிடத்தில் வந்துதேவனுடைய மனுஷன் ஒருவர் என்னிடத்தில் வந்தார்அவருடைய சாயல் தேவனுடைய தூதரின் சாயலைப்போல மகா பயங்கரமாயிருந்ததுஎங்கேயிருந்து வந்தீர் என்று நான் அவரிடத்தில் கேட்கவில்லைஅவர் தம்முடைய நாமத்தை எனக்குச் சொல்லவுமில்லை.

அவர் என்னை நோக்கிஇதோநீ கர்ப்பந்தரித்துஒரு குமாரனைப் பெறுவாய்ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாமலும்தீட்டானது ஒன்றும் புசியாமலும் இருஅந்தப் பிள்ளை பிறந்தது முதல் தன் மரணநாள்மட்டும் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான் என்று சொன்னார் என்றாள்.

அப்பொழுது மனோவா கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணிஎன் ஆண்டவரேநீர் அனுப்பின தேவனுடைய மனுஷன் மறுபடியும் ஒரு விசை எங்களிடத்தில் வந்துபிறக்கப்போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்யவேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக என்று வேண்டிக்கொண்டான்.

தேவன் மனோவாவின் சத்தத்துக்குச் செவிகொடுத்தார்அந்த ஸ்திரீ வயல்வெளியில் இருக்கும்போது தேவனுடைய தூதனானவர் திரும்பவும் அவளிடத்தில் வந்தார்அப்பொழுது அவள் புருஷனாகிய மனோவா அவளோடே இருக்கவில்லை.

ஆகையால் அந்த ஸ்திரீ சீக்கிரமாய் ஓடிஇதோஅன்று என்னிடத்தில் வந்தவர் எனக்குத் தரிசனமானார் என்று தன் புருஷனுக்கு அறிவித்தாள்.
அப்பொழுது மனோவா எழுந்திருந்துதன் மனைவியின் பின்னாலே போய்அவரிடத்துக்கு வந்துஇந்த ஸ்திரீயோடே பேசினவர் நீர்தானா என்று அவரிடத்தில் கேட்டான்அவர் நான்தான் என்றார்.

அப்பொழுது மனோவாநீர் சொன்ன காரியம் நிறைவேறும்போதுஅந்தப் பிள்ளையை எப்படி வளர்க்கவேண்டும்அதை எப்படி நடத்தவேண்டும் என்று கேட்டான்.
கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை நோக்கிநான் ஸ்திரீயோடே சொன்ன யாவற்றிற்கும்அவள் எச்சரிக்கையாயிருந்து,

திராட்சச்செடியிலே உண்டாகிறதொன்றும் சாப்பிடாமலும்திராட்சரசமும் மதுபானமும் குடியாமலும்தீட்டானதொன்றும் புசியாமலும்நான் அவளுக்குக் கட்டளையிட்டதையெல்லாம் கைக்கொள்ளக்கடவள் என்றார்.
அப்பொழுது மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கிநாங்கள் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை உமக்காகச் சமைத்துக்கொண்டுவருமட்டும் தரித்திரும் என்றான்.

கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை நோக்கிநீ என்னை இருக்கச் சொன்னாலும் நான் உன் உணவைப் புசியேன்நீ சர்வாங்க தகனபலி இடவேண்டுமானால்அதை நீ கர்த்தருக்குச் செலுத்துவாயாக என்றார்அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறியாதிருந்தான்.

அப்பொழுது மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கிநீர் சொன்ன காரியம் நிறைவேறும்போதுநாங்கள் உம்மைக் கனம்பண்ணும்படிஉம்முடைய நாமம் என்ன என்று கேட்டான்.
அதற்குக் கர்த்தருடைய தூதனானவர்என் நாமம் என்ன என்று நீ கேட்க வேண்டியது என்னஅது அதிசயம் என்றார்.

மனோவா போய்வெள்ளாட்டுக்குட்டியையும்போஜனபலியையும் கொண்டுவந்துஅதைக் கன்மலையின்மேல் கர்த்தருக்குச் செலுத்தினான்அப்பொழுது மனோவாவும் அவன் மனைவியும் பார்த்துக்கொண்டிருக்கையில்அதிசயம் விளங்கினது.

அக்கினிஜுவாலை பலிபீடத்திலிருந்து வானத்திற்கு நேராக எழும்புகையில்கர்த்தருடைய தூதனானவர் பலிபீடத்தின் ஜுவாலையிலே ஏறிப்போனார்அதை மனோவாவும் அவன் மனைவியும் கண்டுதரையிலே முகங்குப்புற விழுந்தார்கள்.
பின்பு கர்த்தருடைய தூதனானவர் மனோவாவுக்கும் அவன் மனைவிக்கும் காணப்படவில்லைஅப்பொழுது அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறிந்து,

தன் மனைவியைப் பார்த்துநாம் தேவனைக் கண்டோம்சாகவே சாவோம் என்றான்.
அதற்கு அவன் மனைவிகர்த்தர் நம்மைக் கொன்றுபோடச் சித்தமாயிருந்தால்அவர் நம்முடைய கையிலே சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் ஒப்புக்கொள்ளமாட்டார்இவைகளையெல்லாம் நமக்குக் காண்பிக்கவுமாட்டார்இவைகளை நமக்கு அறிவிக்கவுமாட்டார் என்றாள்.
பின்பு அந்த ஸ்திரீ ஒரு குமாரனைப் பெற்றுஅவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள்அந்தப் பிள்ளை வளர்ந்ததுகர்த்தர் அவனை ஆசீர்வதித்தார்.
அவன் சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவிலுள்ள தாணின் பாளயத்தில் இருக்கையில் கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவத்துவக்கினார்.
சிம்சோன் திம்னாத்துக்குப் போய்திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டு,
திரும்ப வந்துதன் தாயையும் தகப்பனையும் நோக்கிதிம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டேன்அவளை எனக்குக் கொள்ளவேண்டும் என்றான்.

அப்பொழுது அவன் தாயும் அவன் தகப்பனும் அவனை நோக்கிநீ போய்விருத்தசேதனமில்லாத பெலிஸ்தரிடத்தில் ஒரு பெண்ணைக் கொள்ளவேண்டியதென்னஉன் சகோதரரின் குமாரத்திகளிலும்எங்கள் ஜனமனைத்திலும் பெண் இல்லையா என்றார்கள்சிம்சோன் தன் தகப்பனை நோக்கிஅவள் என் கண்ணுக்குப் பிரியமானவள்அவளையே எனக்குக் கொள்ளவேண்டும்என்றான்.

அவன் பெலிஸ்தரிடத்தில் குற்றம் பிடிக்க முகாந்தரம் உண்டாகும்படிஇது கர்த்தரின் செயல் என்று அவன் தாயும் தகப்பனும் அறியாதிருந்தார்கள்அக்காலத்திலே பெலிஸ்தர் இஸ்ரவேலை ஆண்டார்கள்.
அப்படியே சிம்சோனும் அவன் தாயும் தகப்பனும் திம்னாத்துக்குப் போகப் புறப்பட்டார்கள்அவர்கள் திம்னாத் ஊர் திராட்சத்தோட்டங்கள் மட்டும் வந்தபோதுஇதோகெர்ச்சிக்கிற பாலசிங்கம் ஒன்று அவனுக்கு எதிராக வந்தது.

அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால்அவன் தன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தும்அதை ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப்போடுகிறதுபோல் கிழித்துப்போட்டான்ஆனாலும் தான் செய்ததை அவன் தன் தாய் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை.
அவன் போய் அந்தப் பெண்ணோடே பேசினான்அவள் சிம்சோனின் கண்ணுக்குப் பிரியமாயிருந்தாள்.

சில நாளைக்குப்பின்புஅவன் அவளை விவாகம்பண்ணத் திரும்பிவந்துசிங்கத்தின் உடலைப் பார்க்கிறதற்கு வழிவிலகிப் போனான்இதோசிங்கத்தின் உடலுக்குள்ளே தேனீக்கூட்டமும் தேனும் இருந்தது.
அவன் அதைத் தன் கைகளில் எடுத்துசாப்பிட்டுக்கொண்டே நடந்துதன் தாய்தகப்பனிடத்தில் வந்துஅவர்களுக்கும் கொடுத்தான்அவர்களும் சாப்பிட்டார்கள்ஆனாலும் தான் அந்தத் தேனைச் சிங்கத்தின் உடலிலே எடுத்ததை அவர்களுக்கு அறிவிக்கவில்லை.

அவன் தகப்பன் அந்தப் பெண் இருக்கும் இடத்தில் போனபோதுசிம்சோன் அங்கே விருந்துசெய்தான்வாலிபர் அப்படிச் செய்வது வழக்கம்.
அவர்கள் அவனைக் கண்டபோதுஅவனோடேகூட இருக்கும்படி முப்பது தோழரை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்.

சிம்சோன் அவர்களை நோக்கிஒரு விடுகதையை உங்களுக்குச் சொல்லுகிறேன்அதை நீங்கள் விருந்துண்கிற ஏழுநாளைக்குள்ளே கண்டுபிடித்து எனக்கு விடுவித்தால்நான் உங்களுக்கு முப்பது துப்பட்டிகளையும் முப்பது மாற்று வஸ்திரங்களையும் கொடுப்பேன்.
அதை எனக்கு விடுவிக்காதேபோனால்நீங்கள் எனக்கு முப்பது துப்பட்டிகளையும் முப்பது மாற்று வஸ்திரங்களையும் கொடுக்கவேண்டும் என்றான்அதற்கு அவர்கள்உன் விடுகதையைச் சொல்லுநாங்கள் அதைக் கேட்கட்டும் என்றார்கள்.

அப்பொழுது அவன்பட்சிக்கிறவனிடத்திலிருந்து பட்சணமும்பலவானிடத்திலிருந்து மதுரமும் வந்தது என்றான்அந்த விடுகதை அவர்களால் மூன்று நாள்மட்டும் விடுவிக்கக்கூடாதே போயிற்று.
ஏழாம்நாளிலே அவர்கள் சிம்சோனின் பெண்சாதியைப் பார்த்துஉன் புருஷன் அந்த விடுகதையை எங்களுக்கு விடுவிக்கும்படிக்கு நீ அவனை நயம்பண்ணுஇல்லாவிட்டால் நாங்கள் உன்னையும் உன் தகப்பன் வீட்டையும் அக்கினியால் சுட்டெரித்துப்போடுவோம்எங்களுக்குள்ளவைகளைப் பறித்துக்கொள்ளவா எங்களை அழைத்தீர்கள் என்றார்கள்.

அப்பொழுது சிம்சோனின் பெண்சாதி அவனுக்கு முன்பாக அழுதுநீ என்னை நேசியாமல் என்னைப் பகைக்கிறாய்என் ஜனங்களுக்கு ஒரு விடுகதையைச் சொன்னாய்அதை எனக்காவது விடுவிக்கவில்லையே என்றாள்அதற்கு அவன்இதோநான் என் தாய்தகப்பனுக்கும் அதை விடுவிக்கவில்லையேஉனக்கு அதை விடுவிப்பேனோ என்றான்.
விருந்துண்கிற ஏழுநாளும் அவள் அவன் முன்பாக அழுதுகொண்டே இருந்தாள்ஏழாம் நாளிலே அவள் அவனை அலட்டிக்கொண்டிருந்தபடியால்அதை அவளுக்கு விடுவித்தான்அப்பொழுது அவள் தன் ஜனங்களுக்கு அந்த விடுகதையை விடுவித்தாள்.

ஆகையால் ஏழாம் நாளிலே பொழுது போகுமுன்னேஅந்த ஊர் மனுஷர் அவனை நோக்கிதேனைப்பார்க்கிலும் மதுரமானது என்னசிங்கத்தைப்பார்க்கிலும் பலமானதும் என்ன என்றார்கள்அதற்கு அவன்நீங்கள் என் கிடாரியால் உழாதிருந்தீர்களானால்என் விடுகதையைக் கண்டுபிடிப்பதில்லை என்றான்.

கர்த்தருடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால்அவன் அஸ்கலோனுக்குப் போய்அவ்வூராரில் முப்பதுபேரைக் கொன்றுஅவர்களுடைய வஸ்திரங்களை உரிந்துகொண்டுவந்துவிடுகதையை விடுவித்தவர்களுக்கு அந்த மாற்று வஸ்திரங்களைக் கொடுத்துகோபம் மூண்டவனாய்ப் புறப்பட்டுதன் தகப்பன் வீட்டுக்குப் போய்விட்டான்.
சிம்சோனின் பெண்சாதியோவென்றால்அவனுடைய தோழரில் அவனோடே சிநேகமாயிருந்த ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாள்.

சிலநாள் சென்றபின்புசிம்சோன் கோதுமை அறுக்கிற நாட்களில் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டுதன் பெண்சாதியைக் காணப்போய்நான் என் பெண்சாதியினிடத்தில் அறைவீட்டிற்குள் போகட்டும் என்றான்அவள் தகப்பனோஅவனை உள்ளே போக ஒட்டாமல்:
நீ அவளை முற்றிலும் பகைத்துவிட்டாய் என்று நான் எண்ணிஅவளை உன் சிநேகிதனுக்குக் கொடுத்துவிட்டேன்அவள் தங்கை அவளைப்பார்க்கிலும் அழகானவள் அல்லவாஅவளுக்குப் பதிலாக இவள் உனக்கு இருக்கட்டும் என்று சொன்னான்.

அப்பொழுது சிம்சோன்நான் பெலிஸ்தருக்குப் பொல்லாப்புச் செய்தாலும்என்மேல் குற்றமில்லை என்று அவர்களுக்குச் சொல்லி,
புறப்பட்டுப்போய்முந்நூறு நரிகளைப் பிடித்துபந்தங்களை எடுத்துவாலோடே வால் சேர்த்துஇரண்டு வால்களுக்கும் நடுவே ஒவ்வொரு பந்தத்தை வைத்துக் கட்டி,
பந்தங்களைக் கொளுத்திபெலிஸ்தரின் வெள்ளாண்மையிலே அவைகளை ஓடவிட்டுகதிர்க்கட்டுகளையும் வெள்ளாண்மையையும் திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும் சுட்டெரித்துப் போட்டான்.

இப்படிச் செய்தவன் யார் என்று பெலிஸ்தர் கேட்கிறபோதுதிம்னாத்தானுடைய மருமகனாகிய சிம்சோன்தான்அவனுடைய பெண்சாதியை அவனுடைய சிநேகிதனுக்குக் கொடுத்துவிட்டபடியால் அப்படிச் செய்தான் என்றார்கள்அப்பொழுது பெலிஸ்தர் போய்அவளையும் அவள் தகப்பனையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்.
அப்பொழுது சிம்சோன் அவர்களை நோக்கிநீங்கள் இப்படிச் செய்தபடியால் நான் உங்கள் கையிலே பழிவாங்கினாலொழிய இளைப்பாறேன் என்று சொல்லி,
அவர்களைச் சின்னபின்னமாகச் சங்காரம் பண்ணிபின்பு போய்ஏத்தாம் ஊர்க் கன்மலைச் சந்திலே குடியிருந்தான்.
அப்பொழுது பெலிஸ்தர் போய்யூதாவிலே பாளயமிறங்கிலேகி என்கிற வெளியிலே பரவியிருந்தார்கள்.
நீங்கள் எங்களுக்கு விரோதமாக வந்தது என்ன என்று யூதா மனுஷர் கேட்டதற்குஅவர்கள்சிம்சோன் எங்களுக்குச் செய்ததுபோலநாங்களும் அவனுக்குச் செய்யும்படி அவனைக் கட்டுகிறதற்காக வந்தோம் என்றார்கள்.
அப்பொழுது யூதாவிலே மூவாயிரம்பேர் ஏத்தாம் ஊர்க் கன்மலைச் சந்திற்குப் போய்பெலிஸ்தர் நம்மை ஆளுகிறார்கள் என்று தெரியாதாபின்னை ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய் என்று சிம்சோனிடத்தில் சொன்னார்கள்அதற்கு அவன்அவர்கள் எனக்குச் செய்தபடியே நானும் அவர்களுக்குச் செய்தேன் என்றான்.

அப்பொழுது அவர்கள்உன்னைக் கட்டிபெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுக்க வந்திருக்கிறோம் என்றார்கள்அதற்குச் சிம்சோன்நீங்களே என்மேல் விழுகிறதில்லை என்று எனக்கு ஆணையிடுங்கள் என்றான்.
அதற்கு அவர்கள்நாங்கள் உன்னை இறுகக்கட்டிஅவர்கள் கையில் ஒப்புக்கொடுப்போமே அல்லாமல்உன்னைக் கொன்றுபோடமாட்டோம் என்று சொல்லிஇரண்டு புதுக் கயிறுகளாலே அவனைக் கட்டிகன்மலையிலிருந்து கொண்டுபோனார்கள்.

அவன் லேகிவரைக்கும் வந்து சேர்ந்தபோதுபெலிஸ்தர் அவனுக்கு விரோதமாய் ஆரவாரம் பண்ணினார்கள்அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால்அவன் புயங்களில் கட்டியிருந்த கயிறுகள் நெருப்புப்பட்ட நூல்போலாகிஅவன் கட்டுகள் அவன் கைகளை விட்டு அறுந்துபோயிற்று.
உடனே அவன் ஒரு கழுதையின் பச்சைத் தாடையெலும்பைக் கண்டுதன் கையை நீட்டி அதை எடுத்துஅதினாலே ஆயிரம் பேரைக் கொன்றுபோட்டான்.
அப்பொழுது சிம்சோன்கழுதையின் தாடையெலும்பினால் குவியல் குவியலாகப் பட்டுக்கிடக்கிறார்கள்கழுதையின் தாடையெலும்பினால் ஆயிரம்பேரைக் கொன்றேன் என்றான்.

அப்படிச் சொல்லித் தீர்ந்தபின்புதன் கையில் இருந்த தாடையெலும்பை எறிந்துவிட்டுஅவ்விடத்திற்கு ராமாத்லேகி என்று பேரிட்டான்.
அவன் மிகவும் தாகமடைந்துகர்த்தரை நோக்கிக் கூப்பிட்டுதேவரீர் உமது அடியேன் கையினால் இந்தப் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டிருக்கஇப்பொழுது நான் தாகத்தினால் செத்துவிருத்தசேதனம் இல்லாதவர்கள் கையிலே விழவேண்டுமோ என்றான்.

அப்பொழுது தேவன் லேகியிலுள்ள பள்ளத்தைப் பிளக்கப்பண்ணினார்அதிலிருந்து தண்ணீர் ஓடிவந்ததுஅவன் குடித்தபோது அவன் உயிர் திரும்ப வந்ததுஅவன் பிழைத்தான்ஆனபடியால் அதற்கு எந்நக்கோரி என்று பேரிட்டான்அது இந்நாள்வரையும் லேகியில் இருக்கிறது.
அவன் பெலிஸ்தரின் நாட்களில் இஸ்ரவேலை இருபது வருஷம் நியாயம் விசாரித்தான்.
 samson, சிம்சோன்,
பின்பு சிம்சோன் காசாவுக்குப் போய்அங்கே ஒரு வேசியைக் கண்டுஅவளிடத்தில் போனான்.
அப்பொழுதுசிம்சோன் இங்கே வந்திருக்கிறான் என்று காசா ஊராருக்குச் சொல்லப்பட்டதுஅவர்கள்காலையில் வெளிச்சமாகிறபோது அவனைக் கொன்றுபோடுவோம் என்று சொல்லிஅவனை வளைந்துகொண்டு இராமுழுதும் அவனுக்காகப் பட்டணவாசலில் பதிவிருந்து இராமுழுதும் பேசாதிருந்தார்கள்.

சிம்சோன் நடுராத்திரிமட்டும் படுத்திருந்துநடுராத்திரியில் எழுந்துபட்டணத்து வாசல் கதவுகளையும் அதின் இரண்டு நிலைகளையும் பிடித்துதாழ்ப்பாளோடேகூடப் பேர்த்துதன் தோளின்மேல் வைத்துஎபிரோனுக்கு எதிரேயிருக்கிற மலையின் உச்சிக்குச் சுமந்து கொண்டுபோனான்.
அதற்குப்பின்பு அவன் சோரேக் ஆற்றங்கரையில் இருக்கிற தெலீலாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயோடே சிநேகமாயிருந்தான்.

அவளிடத்திற்குப் பெலிஸ்தரின் அதிபதிகள் போய்நீ அவனை நயம்பண்ணிஅவனுடைய மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்றும்நாங்கள் அவனைக் கட்டிச் சிறுமைப்படுத்துகிறதற்கு எதினாலே அவனை மேற்கொள்ளலாம் என்றும் அறிந்துகொள்அப்பொழுது நாங்கள் ஒவ்வொருவரும் ஆயிரத்துநூறு வெள்ளிக்காசு உனக்குக் கொடுப்போம் என்றார்கள்.

அப்படியே தெலீலாள் சிம்சோனைப் பார்த்துஉன் மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறதுஉன்னைச் சிறுமைப்படுத்த உன்னை எதினாலே கட்டலாம் என்று நீ எனக்குச் சொல்லவேண்டும் என்றாள்.
Jdg 16:7  அதற்குச் சிம்சோன்உலராத பச்சையான ஏழு அகணிநார்க் கயிறுகளாலே என்னைக் கட்டினால்நான் பலட்சயமாகிமற்ற மனுஷனைப்போல் ஆவேன் என்றான்.

அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் உலராத பச்சையான ஏழு அகணி நார்க் கயிறுகளை அவளிடத்திற்குக் கொண்டுவந்தார்கள்அவைகளால் அவள் அவனைக் கட்டினாள்.
பதிவிருக்கிறவர்கள் அறைவீட்டிலே காத்திருக்கும்போதுஅவள்சிம்சோனேபெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்அப்பொழுதுசணல்நூலானது நெருப்புப்பட்டவுடனே இற்றுப்போகிறதுபோலஅவன் அந்தக் கயிறுகளை அறுத்துப்போட்டான்அவன் பலம் இன்னதினாலே உண்டாயிருக்கிறது என்று அறியப்படவில்லை.

அப்பொழுது தெலீலாள் சிம்சோனைப் பார்த்துஇதோஎன்னைப் பரியாசம்பண்ணிஎனக்குப் பொய்சொன்னாய்இப்போதும் உன்னை எதினாலே கட்டலாம் என்று எனக்குச் சொல்லவேண்டும் என்றாள்.
அதற்கு அவன்இதுவரைக்கும் ஒரு வேலைக்கும் வழங்காதிருக்கிற புதுக்கயிறுகளால் என்னை இறுகக் கட்டினால்நான் பலட்சயமாகிமற்ற மனுஷனைப்போல் ஆவேன் என்றான்.
அப்பொழுது தெலீலாள்புதுக்கயிறுகளை வாங்கிஅவைகளால் அவனைக் கட்டிசிம்சோனேபெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்பதிவிருக்கிறவர்கள் அறைவீட்டில் இருந்தார்கள்ஆனாலும் அவன் தன் புயங்களில் இருந்த கயிறுகளை ஒரு நூலைப்போல அறுத்துப்போட்டான்.

பின்பு தெலீலாள் சிம்சோனைப் பார்த்துஇதுவரைக்கும் என்னைப் பரியாசம்பண்ணிஎனக்குப் பொய்சொன்னாய்உன்னை எதினாலே கட்டலாம் என்று எனக்குச் சொல்லவேண்டும் என்றாள்அதற்கு அவன்நீ என் தலைமயிரின் ஏழு ஜடைகளை நெசவுநூல் பாவோடே பின்னிவிட்டால் ஆகும் என்றான்.
அப்படியே அவள் செய்துஅவைகளை ஆணியடித்து மாட்டிசிம்சோனேபெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்அவன் நித்திரைவிட்டெழும்பிநெசவு ஆணியையும் நூல்பாவையும் கூடப் பிடுங்கிக்கொண்டு போனான்.

அப்பொழுது அவள் அவனைப் பார்த்துஉன் இருதயம் என்னோடு இராதிருக்கஉன்னைச் சிநேகிக்கிறேன் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்நீ இந்த மூன்று விசையும் என்னைப் பரியாசம் பண்ணினாய் அல்லவாஉன்னுடைய மகாபலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்று எனக்குச் சொல்லாமற்போனாயே என்று சொல்லி,
இப்படி அவனைத் தினம்தினம் தன் வார்த்தைகளினாலே நெருக்கி அலட்டிக் கொண்டிருக்கிறதினால்சாகத்தக்கதாய் அவன் ஆத்துமா விசனப்பட்டு,

தன் இருதயத்தையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்திசவரகன் கத்தி என் தலையின்மேல் படவில்லைநான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனானவன்என் தலை சிரைக்கப்பட்டால்என் பலம் என்னை விட்டுப்போம்அதினாலே நான் பலட்சயமாகிமற்ற எல்லா மனுஷரைப்போலும் ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான்.

அவன் தன் இருதயத்தையெல்லாம் தனக்கு வெளிப்படுத்தினதைத் தெலீலாள் 

கண்டபோதுஅவள் பெலிஸ்தரின் அதிபதிகளுக்கு ஆள் அனுப்பிஇந்த ஒருவிசை 

வாருங்கள்அவன் தன் இருதயத்தையெல்லாம் எனக்கு வெளிப்படுத்தினான் என்று 

சொல்லச்சொன்னாள்அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் வெள்ளிக்காசுகளைத் 

தங்கள் கையில் எடுத்துக்கொண்டு அவளிடத்துக்கு வந்தார்கள்

 samson, சிம்சோன்,
அவள் அவனைத் தன் மடியிலே நித்திரைசெய்யப்பண்ணிஒருவனை அழைத்துஅவன் தலைமயிரின் ஏழு ஜடைகளையும் சிரைப்பித்துஅவனைச் சிறுமைப்படுத்தத் தொடங்கினாள்அவன் பலம் அவனைவிட்டு நீங்கிற்று.
அப்பொழுது அவள்சிம்சோனேபெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்அவன் நித்திரைவிட்டு விழித்துகர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல்எப்போதும்போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்றான்.

பெலிஸ்தர் அவனைப் பிடித்துஅவன் கண்களைப் பிடுங்கிஅவனைக் காசாவுக்குக் கொண்டுபோய்அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைத்துக்கொண்டிருக்க வைத்தார்கள்.
அவன் தலைமயிர் சிரைக்கப்பட்ட பின்புதிரும்பவும் முளைக்கத் தொடங்கிற்று.

பெலிஸ்தரின் பிரபுக்கள்நம்முடைய பகைஞனாகிய சிம்சோனை நம்முடைய தேவன் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லிதங்கள் தேவனாகிய தாகோனுக்கு ஒரு பெரிய பலிசெலுத்தவும்சந்தோஷம் கொண்டாடவும் கூடிவந்தார்கள்.

ஜனங்கள் அவனைக் கண்டவுடனேநம்முடைய தேசத்தைப் பாழாக்கிநம்மில் அநேகரைக் கொன்றுபோட்ட நம்முடைய பகைஞனை நம்முடைய தேவன் நமது கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லிதங்கள் தேவனைப் புகழ்ந்தார்கள்.

இப்படி அவர்கள் மனமகிழ்ச்சியாயிருக்கும்போதுநமக்கு முன்பாக வேடிக்கைகாட்டும்படிக்குசிம்சோனைக் கூட்டிக்கொண்டு வாருங்கள் என்றார்கள்அப்பொழுது சிம்சோனைச் சிறைச்சாலையிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தார்கள்அவர்களுக்கு முன்பாக வேடிக்கை காட்டினான்அவனைத் தூண்களுக்கு நடுவே நிறுத்தினார்கள்

சிம்சோன் தனக்குக் கைலாகு கொடுத்து நடத்துகிற பிள்ளையாண்டானோடேவீட்டைத் தாங்குகிற தூண்களிலே நான் சாய்ந்துகொண்டிருக்கும்படி அவைகளை நான் தடவிப்பார்க்கட்டும் என்றான்.
அந்த வீடு புருஷராலும் ஸ்திரீகளாலும் நிறைந்திருந்ததுஅங்கே பெலிஸ்தரின் சகல பிரபுக்களும்வீட்டின்மேல் புருஷரும் ஸ்திரீகளுமாக ஏறக்குறைய மூவாயிரம்பேர்சிம்சோன் வேடிக்கை காட்டுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது சிம்சோன் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டுகர்த்தராகிய ஆண்டவரேநான் என் இரண்டு கண்களுக்காக ஒரே தீர்வையாய்ப் பெலிஸ்தர் கையிலே பழிவாங்கும்படிக்குஇந்த ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும்தேவனேபலப்படுத்தும் என்று சொல்லி,

samson, சிம்சோன்,
சிம்சோன் அந்த வீட்டைத் தாங்கி நிற்கிற இரண்டு நடுத்தூண்களில்ஒன்றைத் தன் வலதுகையினாலும்மற்றொன்றைத் தன் இடதுகையினாலும் பிடித்துக்கொண்டு,
என் ஜீவன் பெலிஸ்தரோடேகூட மடியக்கடவது என்று சொல்லிபலமாய்ச் சாய்க்கஅந்த வீடு அதில் இருந்த பிரபுக்கள்மேலும் எல்லா ஜனங்கள்மேலும் விழுந்ததுஇவ்விதமாய் அவன் உயிரோடிருக்கையில் அவனால் கொல்லப்பட்டவர்களைப்பார்க்கிலும்அவன் சாகும்போது அவனால் கொல்லப்பட்டவர்கள் அதிகமாயிருந்தார்கள்.

பின்பு அவன் சகோதரரும்அவன் தகப்பன் வீட்டாரனைவரும் போய்அவனை எடுத்துக்கொண்டுவந்துசோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவே அவன் தகப்பனாகிய மனோவாவின் கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள்அவன் இஸ்ரவேலை இருபது வருஷம் நியாயம் விசாரித்தான்.




Share:

Popular Posts

Blog Archive

Blog Archive